உடல் நலக்குறைவு: மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் ஹசாரே
டெல்லி: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மெதாந்தா மெடிசிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனக்கு உடல் நலம் சரியில்லை என்று தனது ஆதரவாளர்களிடம் தெரிவி்ததுள்ளார். இதையடுத்து அவரை குர்காவ்னில் உள்ள மெதாந்தா மெடிசிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு ஒரு மருத்துவர் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.
அவருக்கு என்ன பிரச்சனை என்பது தெரிவிக்கப்படவி்ல்லை.
இது குறித்து அன்னா குழுவின் உறுப்பினரான கிரண் பேடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
உடல் நலம் சரியில்லை என்று அன்னா தெரிவித்தார். இதையடுத்து கடந்த முறை அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டபோது அவரை நன்கு கவனித்துக் கொண்ட மெதாந்தாவில் சேர்த்துள்ளோம். அவருக்கு என்ன பிரச்சனை என்பதை மருத்துவர்கள் தான் தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அன்னா குழுவில் இருந்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலின் டுவீட்: அன்னா மருத்துவமனையில் உள்ளார். அவரைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.