For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மயிலாடுதுறையில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி மயக்கம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர் பீடத்தில் பிரசாதம் சாப்பிட்ட 40 பேர் வாந்தி எடுத்து மயக்கமடைந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை அருகே வாய்மேடு என்ற பகுதியைச் சேர்ந்த அம்மாக்கட்டளையில் ஞாயிறு இரவு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன.

இதனை தொடர்ந்து, அனைவருக்கும் புளியோதரை பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இந்த பிரசாதத்தைச் சாப்பிட்ட 40 பேர் வாந்தி எடுத்தனர். பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதை அடுத்து அவர்கள் அனைவரும் திருத்துறைப்பூண்டி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பக்தர்களை மாவட்ட ஆட்சியர் முனுசாமி, வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், உள்ளிட்டோர் நேரில் சென்று பார்த்து, ஆறுதல் கூறினர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

English summary
40 devotees fell ill after they ate prasadam in a temple in Mayiladudurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X