14 தமிழக மீனவர்கள் கைது: ஓவரா ஆட்டம்போடும் இலங்கை கடற்படை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து வைத்துள்ளது.

தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்வதும் அவர்களை இலங்கை கடற்படை அடித்து உதைப்பதும், சிறைபிடித்துச் செல்வதும் தொடர்கதையாகிவிட்டது. இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் குறித்து மீனவர்களும் மாநில, மத்திய அரசுகளிடம் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் மண்படத்தில் இருந்து 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் கரை திரும்பாததால் அவர்களைத் தேட மேலும் 4 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். தேடச் சென்றவர்களை இலங்கை கடற்படை கச்சத்தீவு பகுதியில் சிறைபிடித்தது. மேலும் முன்னதாக கரை திரும்பாத 4 மீனவர்களும் இலங்கை கடற்படையிடம் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது.

இது தவிர கச்சத்தீவில் நாட்டுப்படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 6 தமிழக மீனவர்களையும் இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளது. தங்களிடம் சிக்கிய மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+