For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகம் அழியப்போகுது… சீனாவில் பீதி கிளப்பிய நால்வர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Beijing
பீஜிங்: டிசம்பர் 21ம் தேதியுடன் உலகம் அழியப்போவதாக சீனாவில் பீதி கிளப்பிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

உலக அழிவு பற்றித்தான் இன்றைக்கு ஊடகங்களில் பரபரப்பான பேச்சு அடிபடுகிறது. இணையதளங்களில் அதிக அளவில் தேடியது உலக அழிவு பற்றிய செய்திகளாகத்தான் உள்ளது. இந்த நிலையில் சீனா நாட்டில் இந்த மாதம் 21 ஆம் தேதியுடன் உலகம் அழியப்போகிறது என்று பல்வேறு ஊர்களில் பொதுச் இடங்களில் கூடி சிலர் பிரச்சாரம் செய்துள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சீனா நாட்டின் மத்தியப் பகுதியிலும் மேற்கு மாகாணங்களிலும் பல இடங்களில் உலகம் அழியப்போகிறது என்று நம்பும் பிரிவினர் உள்ளனர். மாயா என்ற அழிந்துபோன அமெரிக்க நாகரிகத்தின் கூற்றுப்படி இந்த மாதம் உலகம் அழியும் என்று இந்தப் பிரிவினர் நம்புகின்றனர். இதனை இணையத்தில் பரப்பி பீதியை கிளப்பி வருகின்றனர். ஆங்காங்கே பொது இடங்களில் கூடி பிரசங்கம் செய்து வருகின்றனர். அவர்களை எச்சரித்த போலீசார் கலைந்து போகும் படி அறிவுறுத்தியுள்ளனர். ஒரு சிலரை கைதும் செய்துள்ளனர்.

ஹாங்காங் நகரில் இந்த காரணத்துக்காக 57 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. உலக அழிவு பற்றி பிரச்சாரம் சீனாவில் மட்டுமல்லாது வேறு பல நாடுகளிலும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

English summary
Police in China's Chongqing city have arrested four people for spreading doomsday rumours that the world will end on December 21 this year. Two men allegedly used a loudspeaker to proclaim the end of the world on the city's streets on Sunday while another two allegedly distributed related pamphlets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X