For Daily Alerts
Just In
சேலம் பட்டாசு ஆலை விபத்தில் 4 பேர் பலி- 11 பேர் காயம்
சேலம் அருகே மேச்சேரி செங்காட்டூர் என்ற இடத்தில் சாந்தி என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையின் கிட்டங்கி ஒன்று உள்ளது. இந்த கிட்டங்கியில் திடீரென இன்று தீவிபத்து ஏற்பட்டது. கிட்டங்கியில் ஏற்பட்ட தீ திமுதிமுவென எரிந்தது.
சம்பவம் நடந்தபோது கிட்டங்கியில் 15 பேர் இருந்தனர்.கிட்டங்கியில் உள்ள பட்டாசுகள் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறிய வண்ணம் இருந்ததால் அந்தப்பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது.
தீயணைப்புப் படையினர் கடுமையாக முயன்று பலரை உயிருடன் மீட்டனர். இருப்பினும் உரி்மையாளர் சாந்தி, சிவகாமி, சூர்யா, கேசவன் ஆகியோர் தீயில் கருகி பலியானார்கள்.
மீட்கப்பட்டவர்களில் 4 பேர் படுகாயத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 7 பேரும் லேசான காயமடைந்தனர்.
Comments
English summary
Many workers feared dead in Salem cracker godown fire accident this morning.