For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெர்மனியில் கொடூரம்: இஸ்லாமுக்கு மாற மறுத்த இந்திய இளைஞனின் நாக்கு துண்டிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Terroist
பான்: ஜெர்மனியில் முஸ்லீம் மதத்திற்கு மாற மறுத்த இந்திய மாணவரை தீவிரவாதிகள் கடுமையாகத் தாக்கி அவரது நாக்கை துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு ஜெர்மனியின் பான் நகரில் இந்திய மாணவர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை மாலையில் தெருவில் நடந்து சென்றபோது, 2 ஆசாமிகள் அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியுள்ளனர். அந்த மாணவர் மறுத்ததால் அவரை தாக்கியுள்ளனர்.

பின்னர் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வீடு திரும்பிம் வழியில் அவரை மறித்த அதே கும்பல் மாணவருடைய மதத்தைப் பற்றி மறுபடியும் கேட்டிருக்கிறார்கள்.அவரும் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள் அந்த மாணவனை உடனடியாக இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியுள்ளனர். மதம் மாற மாட்டேன் என்று சொன்னால் மாணவனுடைய நாக்கை அறுத்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். ஆனால் அதற்கு அந்த மாணவன் மறுக்கவே அவரைக் கொடூரமாகத் தாக்கி நாக்கையும் அறுத்துவிட்டு காரில் தப்பிச் சென்றுவிட்டனர்.

ரத்தக் காயங்களால் துடித்துக்கொண்டிருந்த மாணவனை அந்த வழியாகச் சென்ற ஒருவர் பார்த்து ஆம்புலன்ஸ்க்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்.

மருத்துவமனையில் மாணவனுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களில் அவர் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அவரைத் தாக்கியவர்கள் தீவிர மதவாதிகளாக இருக்கலாம்; அவர்களைப் பற்றிய அடையாளமோ, சரியான விவரமோ மாணவனுக்குத் தெரியவில்லை. நடந்த சம்பவத்தின் அடிப்படையில் அவர்களைத் தேடி வருகிறோம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

English summary
A 24-year Indian student in Bonn was brutally attacked by Islamic extremists who slashed his tongue when he refused to convert, German police said on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X