For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புத்தாண்டு கொண்டாட்டம்.. மகாபலிபுரத்தில் 'ஆட்டம் போட' போலீஸ் தடை!

By Chakra
Google Oneindia Tamil News

மகாபலிபுரம்: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மகாபலிபுரம் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து மகாபலிபுரம் காவல்துறை டிஎஸ்பி கணேசன், இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கும் மகாபலிபுரத்தில் புத்தாண்டை கொண்டாட ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருவார்கள்.

அவ்வாறு புத்தாண்டு கொண்டாடும் சுற்றுலா பயணிகள் தாங்கள் தங்கியுள்ள விடுதிகள் மற்றும் ஹோடல்களில்தான் கொண்டாட வேண்டும், கடற்கரைக்கு செல்லக்கூடாது.

புத்தாண்டு தினத்தன்று இரவில் வரும் மோட்டார் சைக்கிள்கள் மகாபலிபுரம் நகருக்குள் நுழைய அனுமதியில்லை.

கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துபவர்களின் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மகாபலிபுரத்தில் புறவழிச் சாலை, ஈ.சி.ஆர்.சாலை, ராஜிவ்காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்படும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

English summary
Police department has listed out restrictions for New Year revellers at Mahabalipuram
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X