13 வயது சிறுமியை சீரழித்த பக்கத்து வீட்டுக்காரர்.... அடங்க மறுக்கும் காமக் கொடூரர்கள்!
ஹசன்: டெல்லி பாலியல் பலாத்கார செயல் ஏற்படுத்திய வடுவே இன்னும் அழியாமல் இருக்கும் நிலையில் நாடு முழுவதும் பலாத்காரக் குற்றச் செயல்களுக்கு சற்றும் குறைவில்லை. கர்நாடக மாநிலத்தில் 13 வயது சிறுமியை பக்கத்து வீட்டுக்காரர் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது.
கர்நாடகத்தின் ஹசன் மாவட்டம் கட்டயா என்ற கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜு என்ற நபரின் வீட்டுக்குப் பக்கத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். சம்பவ தினத்தன்று அந்த சிறுமியின் தாயார், தனது மகளை பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விட்டு விடுமாறு ரங்கராஜுவிடம் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து ரங்கராஜு சிறுமியை பைக்கில் ஏற்றிச் சென்றார். போகும்வழியில், சிறுமியை ஒரு தனியான இடத்தில் வைத்து பலாத்காரம் செய்து விட்டார். டிசம்பர் 18ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து நேற்று இரவுதான் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரங்கராஜு தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.