வருகிறது தமிழ அரசு போக்குவரத்துக் கழகத்தின் 7 சி கூரியர் சர்வீஸ்
சென்னை: தமிழக அரசின் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 7 சி என்ற பெயரில் கூரியர் சர்வீஸ் தொடங்கப்பட உள்ளது.
தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கோவை மண்டலத்தில் கடந்த ஆண்டு சோதனை முயற்சியாக கூரியர் சர்வீஸ் தொடங்கப்பட்டது. இதன் மூலம் ரூ26 லட்சம் லாபம் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து தற்போது வருவாய் குறைவாக இருக்கும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் குறைந்த கட்டணத்தில் கூரியர் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மிகக் குறைந்த கட்டணம் ரூ7 என்பதால் இத்தகைய சேவையைக் குறிக்கும் வகையில் 7சி என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. மற்ற கூரியர் சேவை நிறுவனங்கள் 24 மணி நேரத்தில் சேவையை வழங்குகின்றன. ஆனால் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் 12 மணி நேரத்தில் சேவையை வழங்க இருக்கிறது. இந்த சேவை இம்மாதத்தில் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தின் இலக்காக ஆண்டுக்கு ரூ1 கோடி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
எப்படியெல்லாம் வருவாயை பெருக்குறாங்க...