திருச்சியில் திமுக நிர்வாகி கழுத்தறுத்து கொலை: அரசியல் காரணமா?
திருச்சி: திருச்சியில் திமுக நிர்வாகி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி காஜாமலையைச் சேர்ந்த சுந்தர் மகன் கனகராஜ்(25). திமுக நிர்வாகி. நேற்று இரவு அவர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. மேலும் உடலிலும் கத்தி குத்து இருந்தது. அவரது உடலுக்கு அருகே 2 செல்போன்கள் கிடந்தன. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திமுகவைச் சேர்ந்த காஜாமலை விஜய் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது கனகராஜும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவர் அரசியல் காரணங்களுக்காகவா அல்லது தொழில் போட்டியால் கொல்லப்பட்டாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திமுக நிர்வாகி கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.