டெல்லியில் மறுபடியும் அக்கிரமம் - ஓடும் பஸ்சில் பாலியல் சேஷ்டைக்குள்ளான ஹோம் கார்ட்!
டெல்லி: டெல்லியில் மீண்டும் ஒரு பாலியல் குற்றம் நடந்துள்ளது. ஓடும் பஸ்சில், பெண் ஹோம் கார்டை ஒருவர் பாலியல் சேஷ்டை செய்து சிக்கி தர்ம அடி வாங்கினார்.
அந்தப் பெண்ணுக்கு 25 வயதாகிறது. இவர் டெல்லி அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தில் பயணித்தபோது அவருக்கு அருகே வந்த ஒரு நபர் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டார். இதைப் பார்த்து அப்பெண் அலறினார். இதையடுத்து அவருக்கு அருகில் இருந்த சக பயணிகள் அந்த நபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
மது விகார் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து அந்த நபரைப் போலீஸார் கைது செய்தனர். 32 வயதான அவரது பெயர் ரஞ்சித். பயணிகள் சரமாரியாகத் தாக்கியதில் அந்த நபரின் கால் முறிந்து போய் விட்டது. இதையடுத்து அவரைப் போலீஸார் முதலில் மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின்னர் அவர் போலீஸ்நிலையம் கொண்டு செல்லப்பட்டார்.