மதுரைக்கு ஒரே விமானத்தில் பறந்த அழகிரி, விஜயகாந்த் ...கண்டுகொள்ளவில்லை
சென்னை: சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற விமானத்தில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் பயணித்துள்ளனர். ஆனால் இருவரும் பேசிக் கொள்ளவில்லையாம்.
சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் மு.க.அழகிரி பயணித்தார். இது அவரது வழக்கமான பயணம். அதேபோல விஜயகாந்த்தும் இதே விமானத்தில் ஏறினார். அவர் ஸ்ரீவில்லிபுத்தூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்சி சார்பில் நடைபெறும் பொங்கல் விழாக்களில் கலந்து கொள்ள கிளம்பினார்.
ஒரே விமானத்தில் இருவரும் பயணித்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளவில்லையாம், பேசிக் கொள்ளவில்லையாம். விமானம் மதுரையில்இறங்கியதும் முதலில் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் இறங்கிப் போய் விட்டாராம். அடுத்து அழகிரி தரையிறங்கினாராம்.
ஒரு வேளை ஸ்டாலினைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக அழகிரியைக் கண்டு கொள்ளவில்லையோ விஜயகாந்த்...