தேனி அரசு கேபிள் டிவி தாசில்தாருக்கு அரிவாள் வெட்டு: கை துண்டானது
தேனி: கேபிள் டிவி ஆபரேட்டர் ஒருவர் அரிவாளால் வெட்டியதில் தேனி அரசு கேபிள் டிவி தாசில்தார் முருகேசனின் கை துண்டானது.
தேனியில் அரசு கேபிள் டிவி தாசில்தாராக இருப்பவர் முருகேசன். அவர் வழக்கம் போல் இன்று அலுவலக வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது கடமலைகுண்டு பகுதியைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆப்ரேட்டர் வேல்முருகன் அங்கு வந்தார். அவர் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து முருகேசனை வெட்டினார். இதில் அவரது கை துண்டானது. உடனே அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே வேல்முருகன் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துவிட்டார்.
கேபிள் டிவி தாசில்தாரை ஆபரேட்டர் ஒருவர் எதற்காக வெட்டினார் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தேனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.