மன்மோகன் மீது கூடத் தான் 'மிகப்பெரிய' ஊழல் புகார்கள் உள்ளன: ஹினா
மின் திட்டங்களை நிறைவேற்ற லஞ்சம் வாங்கியதாாகக் கூறி பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஷ் அஷ்ரபை கைது செய்ய அந்நாட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரி உத்தரவிட்டார். இது குறித்து நியூயார்க்கில் நடந்த ஆசியா சொசைட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறுகையில்,
தெற்காசியாவில் உள்ள பல நாடுகள் மற்றும் பிற நாடுகளிலும் ஊழல் பரவியுள்ளது. இந்திய பிரதமர் மீது கூடத் தான் அண்மையில் மிகப் பெரிய ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்டன என்றார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க காலதாமதம் செய்து உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததால் யூசுப் ராசா கிலானி பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு தான் ராஜா பர்வேஷ் அஷ்ரப் பிரதமர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.