For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை தாக்குதல் வழக்கு: ராணாவுக்கு சிகாகோ நீதிமன்றத்தில் இன்று தண்டனை அறிவிப்பு

By Mathi
Google Oneindia Tamil News

Rana
சிகாகோ: மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்க்கும் ராணாவுக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது.

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 160 பேர் பலியாகினர். இதில் அமெரிக்கர்களும் பலியாகினர். இது தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கனடா குடியுரிமை பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த ராணாவுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து ராணா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு ராணா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது. ராணா தரப்பில் அதிகபட்சமாக 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை கோரப்பட்டுள்ளது.ஆனால் அரசுத் தரப்பில் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க கோரப்பட்டது.

இதனால் ராணாவுக்கு அனேகமாக 9 ஆண்டுகளுக்கு அதிகமான சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

English summary
A Chicago businessman prosecutors say is a terrorist - who supported the group that staged an attack often called India's 9/11 - faces decades in prison Thursday if a federal judge rejects defense arguments that he is a compassionate man who was duped by a friend.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X