For Daily Alerts
Just In
வால்மார்ட் பற்றிய புகார்களை விசாரிக்க ஒருநபர் கமிஷன்: மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் வால்மார்ட் நிறுவனம் பற்றிய புகார்களை விசாரிக்க ஒருநபர் கமிஷன் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று பெரும் தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் சச்சின் பைலட் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சச்ச்னின் பைலட், வால்மார்ட் நிறுவனம் தனது கிளைகளை அமைப்பதற்காக பலருக்கு லஞ்சம் கொடுத்தது என்று புகார்கள் எழுந்துள்ளன.. இது தொடர்பாக விசாரிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை செயல்படுத்துவோம்.
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைப்பது குறித்து முடிவு செய்வோம் என்றார் அவர்
English summary
As promised in the Parliament in December, the government will put in place a one-man commission under the Commission of Inquiry Act, 1951, to probe allegations that American retail giant Wal-Mart had indulged in lobbying activities in India.
Story first published: Saturday, January 26, 2013, 12:10 [IST]