For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்திற்க்கு வைகோ ஆறுதல்

Google Oneindia Tamil News

vaiko
சங்கரன்கோவில்: பயிர்கள் கருகியதால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட விவசாயி ஜெகநாதன் குடும்பத்தினரை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆறுதல் கூறி நிதியுதவியை அளித்தார்.

சங்கரன்கோவில் தாலுகாவில் திருவேங்கடம் அருகே வரகனூர் கிரமத்தை சேர்ந்த விவசாயி ஜெகநாதன் (48 ) பயிர்கள் கருகியதால் தற்க்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து அவரது வீட்டுக்கு நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்றார். ஜெகநாதனின் மனைவி ரெங்கலக்ஷ்மி, மகன் அய்யலுசாமி மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் குடும்பத்தினருக்கு ரூ.50,000 நிதியுதவியையும் அளித்தார்.

இந்த சந்திப்பின்போது குருவிகுளம் ஒன்றியசெயலாளர் சங்கர், நெல்லை மாவட்டச் துனைசெயலாளர் மின்னல் முகமதுஅலி, வரகனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேஷ் கண்னா ஆகியோர் உடன் இருந்தனர்.

English summary
MDMK chief Vaiko met farmer Jaganathan's family and consoled them. Jaganathan of Sankarankovil committed suicide recently after his crops damaged due to non availability of water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X