ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 10 போலீசார் பலி, 9 பேர் காயம்
குந்துஸ்: வடக்கு ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர்.
வடக்கு ஆப்கானிதானின் குந்துஸ் நகரின் வடக்குப் பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் பைக்கில் வந்தான். அவன் அங்கு கூட்டமாக நின்று கொண்டிருந்த போலீசார் அருகே சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். இந்த தாக்குதலில் போக்குவரத்து துறை தலைமை அதிகாரி, தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் உள்பட 10 போலீசார் பலியாகினர்.
மேலும் 5 போலீசார் மற்றும் பொது மக்கள் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால் இப்பகுதியில் தாலிபான் உள்ளிட்ட அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் தான் கபிசா பகுதியில் தாலிபான் தற்கொலைப்படை தீவரிவாதி ஒருவன் காரில் சென்று நேட்டோ படையினரைத் தாக்கியதில் பொது மக்கள் 5 பேர் பலியாகினர், 15 பேர் காயம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications