பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே 3 அணைகள் கட்டும் சீனா
பீஜிங்: பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, சீன அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திபெத்தில் உள்ள கயிலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்ரா நதி, அந்நாட்டில், ‘யார்லுங் சாங்போ' என்ற பெயரில் சீனாவில் அழைக்கப்படுகிறது. இந்த நதி வங்கதேசத்தில் ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நுழையும் இந்த நதி, பிரம்மபுத்ரா என்ற பெயர் பெறுகிறது.
சீனாவின் திபெத் பகுதியில் ஓடும் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே, மூன்று அணைகளை கட்ட, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் இதற்கான நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அணை கட்டும் திட்டம் பற்றி கருத்து கூறியுள்ள சீன வெளியுறவு அதிகாரி ஹாங் லீ, "இந்த நதியின் குறுக்கே அணை கட்டுவதால், இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாயும் ஆற்றில் நீரின் வேகம் குறையாது. தற்போது கட்டப்பட உள்ள அணையிலிருந்து நாங்கள், மின்சாரம் தயாரிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
இந்த அணை கட்டுவது குறித்து, அந்நாட்டு அரசு, இந்தியாவிடம் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கு, பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வருத்தம் தெரிவித்து உள்ளது.