ஜவஹர்லால் நேரு போன்று பிரபலமானவர் நரேந்திர மோடி: அசோக் சிங்கால்
அலகாபாத் வந்த விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் நாட்டில் பிரபலமாக உள்ளார். இந்து சமுதாயத்தின் நலன் தான் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்றார்.
பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று சில பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் சிங்கால் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் விஸ்வ இந்து பரிசத் தலைவர்களை விரைவில் சந்திக்கப் போவதாக அறிவித்ததையடுத்து சிங்கால் பேட்டியளித்தார்.
மோடியை பிரதமர் வேட்பாளராக்குவது குறித்து விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் மூத்த தலைவர் பிரவீன் தொகாடியா கூறுகையில்,
இந்துக்களுக்கு கிடைக்க வேண்டியதை அவர்கள் பெற விஸ்வ இந்து பரிசத் உதவும் என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். பெரும்பான்மை சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் இந்துத்துவ நாடாளுமன்றம் அமைய நாங்கள் ஆதரவாக இருப்போம் என்று பல முறை தெரிவித்துள்ளோம் என்றார்.