For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியைக் கொன்றது ஏன்?... 78 வயது குடிகார தாத்தா பரபரப்பு வாக்குமூலம்

Google Oneindia Tamil News

திருவைகுண்டம்: திருவைகுண்டம் அருகே மதுகுடிக்க தாலியை கழற்றி தராத மனைவியை கொடூரமாக வெட்டி கொன்ற 78 கணவர் தாலியை அடகு வைக்க முயன்றபோது சிக்கி கைதானார். மகன்கள் தனக்கு மாதாமாதம் அனுப்பி வைந்த பணத்தை நிறுத்தியதற்கு மனைவிதான் காரணம் என்பதால் அவரைக் கொன்றதாக அவர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவைகுண்டம் அருகேயுள்ள மேல ஆழ்வார்தோப்பு வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ச்சுணன். இவர் நேற்று காலை வீட்டில் தூங்கிகொண்டிருந்த தனது மனைவி பெரிய பிராட்டியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு கழுத்தில் கிடந்த தாலியை எடுத்து சென்றார்.

இதுகுறித்து திருவைகுண்டம போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவான அர்ச்சுணனை தேடி வந்த நிலையில் நேற்று மதியம் அவரை ஏரலில் வைதது மடக்கி பிடித்தனர். மனைவியிடம் பறித்த தாலியை அவர் ஏரலில் அடகு வைக்க வந்தபோது போலீசார் பிடியில் சிக்கினார்.

போலீஸ் விசாரணையில் மனைவியை கொலைசெய்தது ஏன் என பரபரப்பு வாக்குமூலம் அளி்த்துள்ளார். எனக்கு 6 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன்கள் இருவரும் தனித்தனியாக வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.

எனக்கு குடிப்பழக்கம் இருந்தது. எனக்கு மகன்கள் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் அனுப்பினர். எனது குடிப்பழக்கத்தால் மனைவியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் அவள் எங்களுககு சொந்தமான இன்னொரு வீட்டில் தனியாக வசித்துவருகிறாள்.

எனக்கு சாப்பாடு தர மறுத்ததால் நான் ஹோட்டலில் சாப்பிட்டேன். இதனால் பணம் அதிகமாக செலவானது. குடிப்பழக்கம் வேறு இருந்ததால் பணத்தட்டுபாடு ஏற்படும்போதெல்லாம் மனைவியிடம் சென்று பணம் கேட்பேன். இந்நிலையில் எனக்கு அனுப்பி வந்த பணத்தை மகன்கள் கடந்த 3 மாதமாக நிறுததி விட்டனர்.

எனது மனைவி சொல்லிதான் அவர்கள் நிறுத்தியிருப்பது தெரிய வந்தது. மேலும் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். அவளிடம் தாலியை தரும்படி கேட்டேன். ஆனால் அவள் உயிரே போனாலும் தாலியைதரமாட்டேன் என்று கூறிவிட்டாள். எனவே அரிவாளால் வெட்டி கொன்று விட்டு தாலியுடன் வெளியில் வந்தேன். அதை அடகு வைக்க முயன்றபோது என்னை போலீசார் பிடித்து விட்டனர் என்று அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.

English summary
I killed my wife after she asked my sons to stop giving money for my spending, said 78 year old man who murdered his wife brutally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X