For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜப்பான் வான் எல்லைக்குள் திடீரென நுழைந்த ரஷ்ய விமானங்களால் பரபரப்பு!
டோக்கியோ: ஜப்பானின் வான் எல்லைக்குள் திடீரென ரஷிய விமானங்கள் நுழைந்ததால் பெரும் பதற்றமான சூழல் உருவானது.
ரஷியாவின் 2 போர் விமானங்கள் ஜப்பானின் வடக்கே ஹொக்கிடோ தீவு அருகே உள்ள ரிஷ்ஹிரி தீவின் வான் எல்லைக்குள் நுழைந்து பறந்தன. இதற்கு பதிலடியாக ஜப்பான் போர் விமானங்கள் அவற்றை சூழ்ந்து கொண்டன.
இருப்பினும் தாக்குதல் எதுவும் நடத்தாமல் நல்லெண்ண அடிப்படையில் அந்த போர் விமானங்கள் திரும்பி செல்ல எச்சரிக்கப்பட்டது. பின்னர் ரஷ்ய விமானங்கள் திரும்பிச் சென்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாகவும் இதேபோல் ஜப்பானுக்குள் ரஷ்ய விமானங்கள் அத்துமீறி நுழைந்து பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே ஏற்கெனவே பதற்றமான உறவு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Japan said Russian fighter jets intruded on its airspace for the first time in five years, raising tensions between the two countries at the same time that Tokyo is engaged in a similar high-stakes tangle with China.
Story first published: Friday, February 8, 2013, 11:34 [IST]