For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வினோதினி உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி... திருக்கடையூரில் உடல் தகனம்

Google Oneindia Tamil News

Vinothini
நாகப்பட்டனம்: ஒருதலையாய் காதலித்த தறுதலை ஆசிட் வீசியதில் தனது வாழ்க்கையை இழந்து கடைசியில் உயிரையும் பறிகொடுத்த வினோதினியின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் இன்று நாகை மாவட்டம் திருக்கடையூரில் இன்று தகனம் செய்யப்பட்டது.

காரைக்கால் எம்.எம்.ஜி. நகர் என்ஜினீயர்ஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரே மகள் வினோதினி (23). காரைக் காலில் உள்ள காமராஜர் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் (தகவல் தொழில் நுட்பம்) பட்டம் பெற்றார்.

வினோதினிக்கு சென்னை சைதாப்பேட்டையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. சைதாப்பேட்டையில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார்.

காரைக்கால் திருவட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (25) என்ற வாலிபருக்கும் வினோதினியின் தந்தை ஜெயபாலுக்கும் நட்பு ஏற்பட்டது. சுரேஷ் அடிக்கடி வினோதினி வீட்டுக்கு வந்தபோது வினோதினியின் அழகில் மயங்கினார். ஒரு தலையாய் அவரை காதலித்தார். ஆனால் அதை வினோதினி ஏற்கவி்ல்லை.

கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக வினோதினி ஊருக்கு வந்தார். பின்னர் பணிக்கு திரும்புவதற்காக நவம்பர் 14-ந் தேதி இரவு காரைக்கால் பஸ் நிலையத்துக்கு சென்றார். அப்போது இருட்டில் மறைந்து இருந்த சுரேஷ் வழி மறித்து கையில் வைத்திருந்த ஆசிட்டை வினோதினி மீது வீசினார்.

கை, கால், முகம் ஆகிய இடங்களில் ஆசிட் பட்டதால் எரிச்சலில் வினோதினி அலறினார். உடனே அவரை காரைக்காலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குகுக் கொண்டு சென்றனர். ஆசிட் வீச்சில் முகம் மற்றும் உடல் முழுவதும் வெந்து காணப்பட்டதால் உடனே ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கும்படி டாக்டர்கள் தெரிவித்தனர். அதன்படி உடனடியாக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அதன் பின்னர் அவரை ஆதித்யா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த நிலையில் வினோதினி நேற்று முன்தினம் காலை சிகிச்சை பலனின்றி வினோதினி உயிர் இழந்தார். அவர் இறந்ததை கேள்விப்பட்டதும் பெற்றோர் கதறி துடித்தனர்.

வினோதினியின் தந்தை ஜெயபாலனின் சொந்த ஊர் திருக்கடையூர் ஆகும். இதனால் சென்னையில் இருந்து நேற்று பிற்பகல் வினோதினியின் உடல் வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டது. நேற்று இரவு 9 மணிக்கு திருக்கடையூர் தெற்கு வீதியில் உள்ள வீட்டிற்கு வினோதினியின் உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

அரசியல் கட்சியினர், பொதுமக்கள், மாணவ, மாணவியர் என நூற்றுக்கணக்கானோர் வினோதினி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் இறுதி ஊர்வலம் இன்று காலை நடந்தது. இன்று காலை 9.30 மணிக்கு திருக்கடையூர் தெற்கு வீதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து வினோதினி உடல் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர் அம்மனாறு அருகே மீச்சான்குளம் பகுதியில் வினோதியின் உடல் தகனம் நடந்தது.

English summary
Acid attack victim Vinothini's cremation held in her native place Thirukadayur in Nagai district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X