For Daily Alerts
Just In
ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மனைவியை திட்டி, கொலை மிரட்டல் விடுத்த கணவர் கைது
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மனைவியை திட்டி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அரேுகே உள்ள அயன் கரிசல்குளத்தைச் சேர்ந்த தங்கையாக்கோனார் மகன் தவசிலிங்கம். அவர் அதே பகுதியைச் சேர்ந்த சுபா(36) என்பவரை மணந்து அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுபா தனது தாய் வீட்டுக்கு சென்று கடந்த 1 ஆண்டாக அங்கேயே தான் இருக்கிறார்.
இந்நிலையில் தவசிலிங்கம் தனது மாமியார் வீட்டுக்கு சென்று சுபாவை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சுபா இது குறித்து நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தவசிலிங்கத்தை நேற்று கைது செய்தனர்.
Comments
English summary
Nathampatti police arrested a man for threatening to kill his wife who is lving with her mom after having trouble in the relationship.
Story first published: Friday, February 15, 2013, 14:56 [IST]