ராஜினாமா செய்யும் கையோடு ட்விட்டரில் இருந்து விலகும் போப் பெனடிக்ட் XVI
வாஷிங்டன்: போப் ஆண்டவர் பதினாறாம் பெனடிக்ட் வரும் 28ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்யும் கையோடு ட்விட்டரில் இருந்து விலகுகிறார்.
85 வயதாகும் போப் ஆண்டவரான பதினாறாம் பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி அவர் வரும் 28ம் தேதி பதவியை ராஜினாமா செய்கிறார். அவர் கடந்த இரண்டரை மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் சேர்ந்தார். இரண்டரை மாதத்திற்குள் அவருக்கு 2 மில்லியன் பாலோயர்ஸ் உள்ளனர்.
ஆங்கிலத்தில் 1.5 மில்லியன் பேரும், ஸ்பானிஷில் 700,000 பேரும், இத்தாலிய மொழியில் 335,000 பேரும் ட்விட்டரில் போப் ஆண்டவரை பாலோ செய்கின்றனர். சுமாப் 22,500 பேர் அவரை லத்தீன மொழியில் ட்விட்டரில் பாலோ செய்கின்றனர்.
இந்நிலையில் வரும் 28ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்யும் கையோடு அவர் ட்விட்டர் கணக்கையும் மூடுகிறார் என்று வாடிகன் ரேடியோ தெரிவித்துள்ளது.