For Daily Alerts
Just In
கோழிக்கோட்டில் லேசான நில அதிர்வு: மக்கள் பீதி
கோழிக்கோடு: கோழிக்கோட்டில் நேற்று இரவு 11 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நேற்று இரவு 11 மணிக்கு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. பெரோகி, கடலுண்டி, பெய்போர், ராமநாட்டுக்காரா, கல்லாயி மற்றும் திருவண்ணூர் பகுதிகளில் இந்த அதிர்வு உணரப்பட்டது. அதிர்வு சில நொடிகள் நீடித்தது. ஆனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே வந்ததாகக் கூறப்படுகிறது.
அதிர்வு ஏற்பட்டவுடன் மக்கள் முதலில் ஏதோ இடி இடித்தது என்று நினைத்துள்ளனர். பின்னர் தான் அது நில அதிர்வு என்பதை புரிந்து கொண்டனர். நில அதிர்வால் பொருட் சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.
Comments
English summary
Panic struck the people in some parts of Kozhikode district after a mild tremor was experienced last night. The tremor, which was experienced at about 11 p.m., lasted for a few seconds in Feroke, Kadalundi, Beypore, Ramanattukara, Kallayi and Tiruvannur areas, sources said. No casualty or damage was reported.
Story first published: Wednesday, February 27, 2013, 13:59 [IST]