மார்பகங்களால் மூச்சுத் திணறடித்து காதலனை கொல்ல முயன்ற பெண்!
ஜெர்மனியின் உன்னா நகரைச் சேர்ந்த ஆன்ட்ரியல் கோல்லர் என்பவரை கெரின் (33) என்ற பெண் உடலுறவின்போது கொலை செய்ய முயன்றதாகவும், அவரது மார்பக மூச்சுத் திணறலில் இருந்து கோல்லர் தப்பியபோது, அவரை கழுத்தை நெரித்து கெரின் கொல்ல முயன்றதாகவும் வழக்குப் பதிவாகியுள்ளது.
ஆனால், அந்தப் பெண்ணுக்கு சில மன நலப் பிரச்சனைகள் உள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்ததையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் ரத்து செய்தனர்.
இது குறித்து கோல்லர் கூறுகையில், நான் கெரினை முழு மனதோடு இன்னும் காதலிக்கிறேன். அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நான் கோரவில்லை. அவருக்கு உரிய மன நல சிகிச்சை தரப்பட வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார்.
சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் இதே போல தனது காதலனின் முகத்தை தனது மார்பகங்களுக்கு இடையே வைத்து அழுத்தி, மூச்சு மூட்டச் செய்து கொலை செய்தது நினைவுகூறத்தக்கது.
வாஷிங்டனின் எவெரெட் பகுதியைச் சேர்ந்த 51 வயது பெண்ணான டோனா லாங்கே தனது பாய் பிரண்ட்டுடன் குடித்துவிட்டு மோதலில் ஈடுபட்டனர். அப்போது பாய்பிரண்டை கீழே தள்ளிவிட்ட டோனா, அவரது முகத்தில் தனது மார்பகங்களை வைத்து அழுத்தியுள்ளார். இதில் மூச்சு முட்டிய அந்த நபர் சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.
தொடர்பான செய்திகள்: மார்பகங்களால் மூச்சுத் திணறடித்து 'பாய் பிரண்டை' கொன்ற பெண்!