டெசோ பந்த்: நாகையில் திமுக எம்.பி. விஜயன், திருச்சியில் நேரு கைது
திருச்சி: டெசோ பந்தை முன்னிட்டு மறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி. விஜயன் மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் நேரு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கோரி டெசோ அமைப்பு சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தையொட்டி நாகையில் சாலை மறியல் செய்ய முயன்ற திமுக எம்.பி. விஜயன் உள்பட 50 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
இது தவிர திருச்சியில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து மறியலில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர் நேரு கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் முழுவதும் 4,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெசோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் 10,000க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் கோவையில் சிறு தொழில் நிறுவனங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டுள்ளன.