ராம்சிங் தற்கொலை...4 குற்றவாளிகளுக்கும் தீவிர பாதுகாப்பு, ரகசிய கேமரா மூலம் கண்காணிப்பு
டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்சிங், திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து மற்ற 4 குற்றவாளிகளையும் சிறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.அவர்கள் இருக்கும் அறைகள் ரகசியக் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து திகார் சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,மாணவி பலாத்கார வழக்கில் கைதான மற்ற 4 பேரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ஒரு அதிகாரி அவர்களது நடவடிக்கைகளை ரகசிய காமிரா மூலம் கண்காணிப்பார் அவர்களை கண்காணிப்பதற்காக சிறையில் ரகசிய காமிராக்களை அதிகப்படுத்தியுள்ளோம். இந்த 4 பேரும் எந்தவித தவறான முடிவும் எடுத்து விடுவதை தடுப்பதற்காக இந்த கண்காணிப்பு பணி நடைபெறுகிறது என்றார்.
தற்போது திகார் சிறையில் ராம்சிங்கின் தம்பி முகேஷ் மற்றும் வினய் ஆகியோர் 7ம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பவான் மற்றும் அக்ஷய் ஆகியோர் 4ம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.