For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரானைட் ஊழல்- பி.ஆர்.பழனிச்சாமி, மகன் சுரேஷ்குமார், மச்சான் தெய்வேந்திரன் வீடுகளில் ரெய்டு

Google Oneindia Tamil News

PR Palanichmay
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் பிஆர்பி கிரானைட்ஸ் உரிமையாளர் பி.ஆர்.பழனிச்சாமி, மகன் சுரேஷ்குமார், மைத்துனர் தெய்வேந்திரன் ஆகியோரது வீடுகள், அலுலவகங்களில் போலீஸார் ரெய்டு நடத்தினர்.

மதுரையை உலுக்கிய மிகப் பெரிய மோசடி பி.ஆர்.பியின் கிரானைட் முறைகேடு. இந்த வழக்கில் பிஆர்பி கைது செய்யப்பட்டு பல்வேறு வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. பல ஆயிரக்கணக்கான கோடிக்கு இவர் முறைகேடு செய்திருப்பதாக போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னாள் கலெக்டர் சகாயம் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் பிஆர்பி மீது நடவடிக்கைகள் பாய்ந்தன.

தற்போது பிஆர்பி ஜாமீனில் விடுதலையாகி வெளியே இருக்கிறார். இந்த நிலையில் பிஆர்பியின் மகன் சுரேஷ்குமார் மீது சமீபத்தில் ஒரு வழக்குப் பாய்ந்தது. அதில் சுரேஷ்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து இன்று தனிப்படை போலீஸார் சோதனை நடவடிக்கையில் இறங்கினர்.பி.ஆர்.பழனிச்சாமி, சுரேஷ்குமார், பிஆர்பியின் மைத்துனர் தெய்வேந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்கள் உள்பட மொத்தம் 8 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

இதில் ஏதாவது சிக்கியதா என்பது குறித்துத் தகவல் இல்லை.

English summary
Madurai police team hold raids at the residences of P.R.Palanichmay, Son Sureh Kumar and brother in law Deiventhiran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X