இளம் பெண்ணை தூக்கி சென்று பலத்கார முயற்சி : ரவுடி கைது
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே லிங்கப்பட்டியில் இளம் பெண்ணை தூக்கி சென்று பலத்காரம் செய்ய முயன்ற ரவுடி கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி அருகே உள்ள லிங்கப்பட்டி நடுதெருவை சேர்ந்தவர் அந்தோணி. அதே தெருவை சேர்ந்த செந்தில் என்பவரின் மனைவி மாரியம்மாள். இவர் பண்ணையில் பால் வாங்கி கொண்டு அந்தோணி வீடு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது வாசலில் அமர்ந்திருந்த அந்தோணி அவரை வழிமறித்து பலவந்தமாக வீட்டுக்குள் தூக்கி சென்று கதவை சாத்தினார்.
கூச்சல் போட்ட மாரியம்மாள் வாயில் துணியை வைத்து அடைத்த அந்தோணி சத்தம் போட்டால் கொன்று விடுவேன் என மிரட்டி மாரியம்மாளை பலாத்காரம் செய்ய முயன்றார். சிறிது போராட்டத்திற்கு பின் வாயில் இருந்த துணியை எடுத்த மாரியம்மாள் கூச்சல் போட்டதால் அந்த சத்தத்தை கேட்டு சுற்றியிருந்த மக்கள் அந்தோணி வீட்டின் கதவை உடைந்து உள்ளே புகுந்து மாரியம்மாளை விடுவித்தனர். அவரது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்காக அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிகிகப்பட்டுள்ளார்.
அந்தோணியை பிடித்து நாலாட்டின்புதூர் போலீசில் பொதுமக்கள் ஓப்படைத்தனர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அந்தோணி நைசாக தப்பி ஓடினார். துரத்தி சென்ற போலீசாரால் அவரை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் இரவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த அவரை மீண்டும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசில் ஓப்படைத்தனர். இதுகுறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.