திமுகவின் வாபஸ் அறிவிப்பால் சென்செக்ஸ் கிடுகிடு வீழ்ச்சி
இலங்கை விவகாரத்தி்ல மத்திய அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக திமுக அறிவித்தது. இது இன்று பங்குச் சந்தையில் எதிரொலித்தது.
திமுகவின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 350 புள்ளிகள் இறங்கி 19,000 புள்ளிகளுக்கும் கீழே சென்செக்ஸ் போனது. அதேபோல நிப்டியும் 100 புள்ளிகள் குறைந்து 5750 ஆக குறைந்தது.
இதற்கிடையே, அரசு நிலையாக இருப்பதாகவும், கவிழாது என்றும் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அரசுக்குப் பெரும்பான்மை பலம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் திமுக விலகி விட்டதால் அரசுக்கு வலுவான பெரும்பான்மை இருப்பதாக கூற முடியாது. முக்கிய முடிவுகளை நிறைவேற்றுவதில் நிச்சயம் சிக்கல் வரும் என்று அரசியல் ஆய்வாளர் வினோத் சர்மா தெரிவித்துள்ளார்.
திமுகவுக்கு லோக்சபாவில் 18 எம்.பிக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.