கோவாவுக்கு வரப் போகும் 'பிளேபாய்' கிளப்....?
பனாஜி: கோவாவில்பிளேபாய் பத்திரிக்கையின் கிளப் அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பான பிளேபாயின் கோரிக்கையை கோவா மாநில அரசு பரிசீலித்து வருகிறதாம்.
இந்தத் தகவலை கோவா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் திலீப் பருலேகர் தெரிவித்துள்ளார்.
கோவா மாநிலத்தின் கண்டோலிம் கடற்கரையில் இந்த கிளப் அமைக்க பிளேபாய் பத்திரிக்கை திட்டமிட்டுள்ளதாம்.
கண்கவர் கண்டோலிம் பீச்
கோவாவின் அழகான கடற்கரைப் பகுதிதான் இந்த கண்டோலிம் பீச். படு க்யூட்டானது, கவர்ச்சியானது.
உயிரே..உயிரே...
பம்பாய் படத்தில் வந்ததே உயிரே உயிரே பாடல்.. அந்தப் பாடலை இந்த பீச்சில்தான் வைத்து சுட்டார் மணிரத்தினம். நிறையப் படங்களில் இந்த கடற்கரையைப் பார்த்திருக்கலாம்.
பிளேபாயை ஈர்த்த கண்டோலிம்
இப்படிப்பட்ட அழகான, சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இந்த பீச்சைத்தான் தற்போது தனது கிளப்பை அமைக்க பிளேபாய் முடிவு செய்துள்ளது.
பெர்மிஷன் கொடுத்திட்டீங்களா.. பாஜக கேள்வி
இந்த கிளப்புக்கு கோவா அரசு அனுமதி கொடுத்து விட்டதா என்று பாஜக சட்டசபையில் கேள்வி எழுப்பியபோதுதான், அதுகுறித்து பரிசீலித்து வருவதாக கோவா அமைச்சர் பருலேகர் தெரிவித்தார்.
அசிங்கத்திற்கு பெர்மிஷன் கிடையாது
அதேசமயம், சுற்றுலா தொடர்பான வர்த்தகத்திற்கு கோவா அரசு துணை போகுமே தவிர அசிங்கமான விஷயங்களுக்கு நிச்சயம் நாங்கள் துணை போக மாட்டோம் என்றும் கோவா அமைச்சர் தெரிவித்தார்.
பொறுத்திருந்து பார்க்கலாம், இளமைத் தலைநகரான கோவாவுக்கு பிளேபாய் வருமா என்பதை...