பிரமாதப்படுத்திய பெங்களூர்
நேற்று நடந்த பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் இடையிலான ஆட்டத்தின்போதுகெய்லின் ஆட்டம்தான் அபாரமாக இருந்தது. 58 பந்துகளில் 92 ரன்களை அவர் விளாசினார்.
கடைசி ஓவரில் கிடுகிடுத்த வினய்
கடைசி ஓவரின்போது மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுவற்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது. அப்போது பந்து வீசியவர் வினய் குமார். அவரது முதல் பந்தில் அம்பட்டி ராயுடு ஆட்டமிழந்தார். அடுத்து திணேஷ் கார்த்திக் வீழ்ந்தார். 3வது பந்தில் ராயுடு வீழ்ந்தார்.
8 ரன் மட்டும் கிடைச்சிருந்தா...
கடைசி 2 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஆனால் அதில் தவறிப் போயினர் பெங்களூர் அணியினர்.
வரலாற்றிலேயே முதல் முறையாக
ரிக்கி பான்டிங்கும், சச்சினும் நேற்றைய போட்டியில் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.இருவரும் இணைந்து தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கியது ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும். சிறப்பாகவும் ஆடினர். இருவரும் இணைந்து 52 ரன்களைச் சேர்த்தனர்.
எப்படி இருந்த பெங்களூர்
பெங்களூர் அணி ஒரு கட்டத்தில் 12.4 ஓவரின்போது 5 விக்கெட்கள் இழப்புக்கு 80 ரன்களுடன் தவித்தது. ஆனால் கெய்ல்தான் புயல் வேகத்தில் ஆடி ரன் குவிப்பை துரிதப்படுத்தினார்.
காயமே அது பொய்யடா...
இத்தனைக்கும் கெய்ல் காலில் காயத்துடன் ஆடினார். என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் வலியைப் பொறுத்துக் கொண்டு அதை பந்தை அடிப்பதில் காட்டினார்.
மும்பை தரப்பில் பொளந்து கட்டிய ஜஸ்பிரீத்
மும்பை இந்தியன்ஸ் அணியின் அறி்முக பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பந்து வீச்சில் கலக்கினார்.32 ரன்களைக் கொடுத்த அவர் 3 விக்கெட்களைச் சாய்த்தார்.
ஜாகிர் கான் ஆடவில்லை
காயம் காரணமாக ஜாகிர்கான் நேற்றைய போட்டியில் ஆட முடியாமல் போய் விட்டது.