இந்தியக் கடல் பகுதிக்குள் அடிக்கடி மூக்கை நுழைக்கும் சீன அணு நீர்மூழ்கிக் கப்பல்கள்
இதுவரை 22 முறை சீனாவின் அணு நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் ஊடுறுவியதாக இந்திய கடற்படைத் தரப்பில் கூறப்படுகிறது. கடைசியாக பிப்ரவரி மாதம் சீனா ஊடுறுவியுள்ளது. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஊடுறுவியது பதிவாகியுள்ளது.
இந்த அணு நீர்மூழ்கிக்க ப்பல்களின் ஊடுறுவல் குறித்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு இந்திய கடற்படை அறிக்கை அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் சோனார் கருவியின் உதவியுடன் இந்திய கடற்படை இந்த ஊடுறுவல்களைக் கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவைத் தவிர்த்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் புழக்கத்தில் உள்ள கடற்படை சீனா மட்டுமே. இதை அமெரிக்காவும் உறுதி செய்துள்ளது. இந்தியப் பெருங்கடலுக்குள், சீனா நீர்மூழ்கிக் கப்பல்கள் ஊடுறுவியபோது எந்தவிதமான எதிர்ப்பையும் அவை சந்திக்கவில்லையாம். ஆனால் இது இந்தியக் கடற்படைக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் கிட்டத்தட்ட இந்தியக் கடலுக்குள் 90 கிலோமீட்டர் தூரம் வரை சீன நீர்மூழ்கிக் கப்பல் ஊடுறுவியதாம். அதேபோல