ஆண் குழந்தை பெற்றால் மட்டுமே சொர்க்கத்திற்குப் போகலாம்.... ஆந்திர பழங்குடியினரின் விநோத நம்பிக்கை
குண்டூர்: ஆண் குழந்தை இல்லாவிட்டால் சொர்க்கம் கிடைக்காது, நரகம் தான் என்ற மூட நம்பிக்கையில் வாழ்கின்றனராம் ஆந்திராவில் வாழும் ஒரு பிரிவு பழக்குடியினர்.
ஆந்திராவில் உள்ள குண்டூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள போலப்பள்ளியைச் சேர்ந்த காதிதந்தா என்ற பழங்குடியனருக்குத் தான் இப்படி ஓர் விநோத நம்பிக்கையாம்.
நோ... பையன், நோ... குடும்பக்கட்டுப்பாடு!
ஆண் குழந்தை பிறக்கும் வரை இப்பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்வதில்லையாம். அதனால் சிலருக்கு 11 பெண்களுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்த கதைகளும் உண்டாம்.
என்ன கொடுமை சார் இது...
சில ஆண்கள் மறுமணம் கூட செய்திருக்கிறார்களாம் ஆண் குழந்தைகள் வேண்டி... அப்படியும் சிலருக்கு மீண்டும் பெண் குழந்தைகளே பிறந்த வேடிக்கையும் உண்டாம்.
முத்துக்கு முத்தாக... 11 பெண் குழந்தைகள்
கிட்டத்தட்ட இவ்வூரில் 30 குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் தலா குறைந்தபட்சம் 11 பெண் குழந்தைகளாம்.
சொர்க்கத்தின் எண்ட்ரி பாஸ்...
நரகத்தின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க, கட்டாயம் ஆண் வாரிசு வேண்டும் என்பது இவர்களது தீவிர நம்பிக்கையாம்.
விழித்திரு...
கடந்த இருபது ஆண்டுகளாகத் தான் இந்த நம்பிக்கை அதிகமாக உள்ளதாம். போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக நம்பப்படுகிறது.