ஜெய்ப்பூர்: ஐபிஎல் 6வது தொடரில் நேற்று இரவு ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ராஜஸ்தான் ராஜயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் டிராவிட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மந்தீப்சிங்- கில்கிறிஸ்ட் ஜோடி தொடக்க வீரர்களாக களம் இறங்கியது. தொடக்கத்திலேயே பஞ்சாப் அணிக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது.
கில்கிறிஸ்ட் 0 ரன்னிலும் மந்தீப்சிங் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தார். வோரா 3 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் இணைந்த டேவிட் ஹசி- குர்கீரத் சிங் ஜோடி சிரிது நேரம் விளையாடியது. சிங் 10 ரன்களில் வெளியேறினார். டேவிட் ஹசி மட்டுமே நிலைத்து ஆடினார்.அவர் 41ரன்கள் வரை எடுத்திருந்தார். அந்த அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 124 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.