கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும்!
சிங்கப்பூர்: பொதுவாக கடல் உயிரினங்களான மீன், நண்டு போன்றவற்றை பார்த்தவுடன் நம்மில் பலருக்கு நாக்கில் எச்சில் ஊரும். ஆனால் இங்கு தட்டில் படைக்கப்பட்டிருப்பவை உணவுகள் அல்ல... ஓவியங்கள் என்றால் நம்ப முடிகிறதா?
Hyper-Realistic எனப்படுகின்ற உயிரோட்டமான ஓவியங்கள் மனித கண்களை ஏமாற்றுவதில் முக்கியமானவை.
சிங்கப்பூரை சேர்ந்த கெங்லே என்ற கலைஞர் இதுபோன்ற ஓவியங்களி வரைவதையே தனது பொழுதுபோக்காக வைத்துள்ளார். அவரின் ஓவியங்களில் சில உங்களின் பார்வைக்கு!!
இது சாங்மீக்கு அல்ல...
தென் கொரியாவில் சாப்பிடும் உயிருள்ள ஆக்டோபஸ் உணவு என நீங்கள் நினைத்தால் ஏமாந்து தான் போவீர்கள். இது பெயிண்டிங்...
மீனா... உன் கண்ணுக்குள்ளே மின்னலென்ன
அழகுக்காக இந்த கோல்ட் பிஷ் வளர்க்கலங்க... இது ஆசைக்காக வரைஞ்சது
மஞ்சள் தாமரை மகளே...
கூந்தலை விரித்து கோல நடனமிடும் இந்த மீன் கோப்பைக்குள் வரைந்த குட்டி அழகி...
மயிலின் தோகை நிறமே...
ஆலகால விஷம் அருந்தினாயோ... இல்லை, ப்ளூ வண்ணம் குடித்தாயோ
முயலாமை தான் தப்பு...
ஆமை உயிரோட நுழைஞ்சா தான் தப்பாம்... ஓவியமா இருந்தா குத்தமில்லயாம்
நண்டு ஊருது, நரி ஊருது...
இங்க இறால் ஊருது... ஓவியத்துல
சிவப்பீஸ்...
இது நம்ம ஊரு அயிலை, நெத்திலி மாதிரி இருக்குதுல...