9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர்.. புதிய படிமங்கள் மடகாஸ்கரில் கண்டுபிடிப்பு
வாஷிங்டன்: 9 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் படிமங்கள் மடகாஸ்கரில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்கா கண்டத்துக்கு தென் கிழக்கே அமைந்துள்ள மாபெரும் தீவு மடகாஸ்கர்.
பண்டைய ஆய்வுகள், படிமங்கள் பற்றி ஆராய்பவர்களுக்கு மடகாஸ்கர் நாடு ஒரு பொக்கிஷமாகவே கருதப்படுகிறது. இங்கு பதிந்திருந்த டைனோசரின் படிமங்களை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த டைனோசர், சுமார் 9 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இங்கு உளாவியதாக கருதப்படுகிறது.
மாடு மாதிரி இருந்ததாம்...
மாமிசம் தின்னும் இந்த இரு கால்கள் உடைய டைனோசர் ஒரு பெரிய பசு மாட்டின் அளவிற்கு இருந்ததாக கூறப்படுகிறது.
புதுசு, கண்ணா... புதுசு
கடந்த பத்து வருடங்களில் கிடைத்த டைனோசர் படிமங்களிலேயே இது புதிய வகை டைனோசராக இருக்க கருதப்படுகிறது.
பண்டிட் குயின்...
'லோன்லி ஸ்மால் பண்டிட்' என்று பெயரிடப்பட்டுள்ளதாம் இதற்கு. இது 2.7 முதல் 4.2 மீட்டர் நீளமுள்ளதாக உருவ அமைப்பை பெற்றிருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
அமெரிக்க டைனோசர்...
கண்டங்களாக பிரிவதற்கு முன் இந்தியாவுடன் மடகாஸ்கர் ஒன்றாக இணைந்து இருந்த காலக்கட்டத்தில் அந்த டைனோசர் வாழ்ந்ததாக அமெரிக்க படிம ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.