For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹரியாணாவில் வதேரா நில மோசடி எதுவும் செய்யவில்லை: 3 நபர் கமிட்டி சொல்லியாச்சு!

Google Oneindia Tamil News

Robert Vadra
சண்டீகர்: ஹரியாணா மாநிலத்தில் ராபர்ட் வதேரா நில மோசடி எதுவும் செய்யவில்லை என 3 நபர் கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வதேரா மீது கட்டுமான நிறுவனம் டி.எல்.எப்.புடன் இணைந்து நில மோசடியில் ஈடுபட்டதாக ஹரியாணா மாநில பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த அசோக் கெம்கா குற்றம் சாட்டியிருந்தார்.

இதுதொடர்பாக அந்த மாநில அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் கிருஷ்ண மோகன் தலைமையில் 3 நபர் விசாரணை கமிட்டியை அமைத்தது.

அந்த கமிட்டி விசாரணை அறிக்கையை தயாரித்துவிட்டது என்றாலும், அறிக்கை விவரங்களை வெளியிட முடியாது, தலைமை செயலாளரிடம் தான் ஒப்படைக்கப்படும், அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தனர்.

ஆனாலும் அந்த அறிக்கையில் வதேரா எந்த விதிமுறை மீறலிலும் ஈடுபடவில்லை என கூறப்பட்டுள்ளது. எனினும் அசோக் கெம்கா கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து இந்த அறிக்கை மாறுபட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

English summary
Virtually giving a clean chit to Robert Vadra in the controversial land deal with DLF, a Haryana government panel has held there was no undervaluation while rejecting senior IAS officer Ashok Khemka's charge of wrongdoing in the transaction.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X