முதல் நபர் கற்பழித்தவுடன் மயங்கிய 5 வயது டெல்லி சிறுமியை பலாத்காரம் செய்த காமுகன்
கிழக்கு டெல்லியில் உள்ள காந்தி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி 2 பேரால் கற்பழிக்கப்பட்டு தாக்கப்பட்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மனோஜ் குமார்(22) சிறுமியை தான் ஒன்றுமே செய்யவில்லை என்றும், தனது நண்பன் பிரதீப்(19)
தான் கற்பழித்தாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரதீப் போலீசாரிடம் தெரிவித்ததாக செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது,
மனோஜ் சிறுமியை கற்பழித்தபோது அவர் உதவி கேட்டு அலறித் துடித்தார். மேலும் சிறுமிக்கு அப்போது ரத்தப் போக்கு ஏற்பட்டது. மனோஜ் கற்பழித்த பிறகு சிறுமி சுயநினைவை இழந்துவிட்டார். அப்படி இருந்தும் பிரதீப் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரியாமல் இருக்க அவர்கள் சிறுமியை கொலை செய்ய முடிவு செய்தனர். சிறுமியின் கழுத்தை அறுக்க முயன்றுள்ளனர். பின்னர் மனோஜ் சிறுமியை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு பிரதீப்புடன் டெல்லி ரயில் நிலையத்திற்கு சென்றார். அங்கிருந்து இருவரும் தங்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு ரயில் ஏறினர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.