For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 2 பேர் பலி

Google Oneindia Tamil News

சிவகாசி: சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் அதே இடத்தில் பலியானார்கள்.

சிவகாசி - சாத்தூர் சாலையில் அனுப்பன்குளம் என்ற கிராமம் உள்ளதுத. இங்கு தனியாரப் ஒருவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்ப்டடு வருகின்றது. அதில் 200 பேர் இதில் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது மற்ற அறைகளில் பணியாற்றியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

ஆனால் 82 ம் அறையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக அந்த அறை கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி திருத்தங்கலைச் சேர்ந்த ரவி, ராஜகோபால் ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள்.

மேலும் ராஜரத்தினம் என்பவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை கணக்கபிள்ளை முருகேசன், போர்மென் பாண்டியராஜன் மற்றும் முத்துகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சிவபிரானை போலீஸார் வலை வீதி தேடி வருகின்றனர்.

English summary
Two people were dead yesterday after a fire broke out in a small cracker factory at Anuppamkulam village near Sivakasi in Virudhunagar district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X