For Daily Alerts
Just In
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஹன்சிகா
சென்னை: நகர்புற பெண்களிடையே மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவிருக்கிறார் ஹன்சிகா.ஹன்சிகா தனது 20வது பிறந்தநாளில் 20 குழந்தைகளை தத்தெடுத்தார். அதன் பிறகு 21வது பிறந்தநாளில் மேலும் 2 குழந்தைகளை தத்தெடுத்தார். அவர் அந்த குழந்தைகளின் படிப்புச் செலவுகளை கவனித்து வருகிறார். பொண்ணு சின்னப் பொண்ணாக இருந்தாலும் தாராள மனசு.
இப்படி அடுத்தவர்களுக்கு உதவும் ஹன்சிகா தற்போது நகர்புற பெண்களிடையே மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் 'சென்னை டர்ன்ஸ் பிங்க்' என்ற நிகழ்ச்சியில் பங்கு கொள்கிறார்.
வெஸ்ட் கேன்சர் ரிசர்ச் பவுன்டேஷனின் இந்த முயற்சியில் ஹன்சிகா உதவுகிறார். இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் விரைவில் துவங்கப்படும். இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஹன்சிகா கலந்து கொண்டார்.
Comments
English summary
Hansika is going to be the face of a new initiative called 'Chennai turns pink' to create awareness about breast cancer among urban women.