For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமநவமி விழாவில் ஆபாச நடனமாடிய 3 பெண்கள் உட்பட 17 நடன கலைஞர்கள் கைது

Google Oneindia Tamil News

நெல்லூர்: நெல்லூரில் பார்ப்பவர்கள் கண்கள் கூசுமாறு, ராமநவமி விழாவில் ஆபாச நடனமாடிய 3 பெண்கள் உட்பட 17 நடன கலைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் பல இடங்களில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. விழா நிறைவு நாளை முன்னிட்டு கிராமங்களில் ரிக்கார்டு டான்சுக்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்து இருந்தனர். டிரைவருடன் டிராக்டரை நடுரோட்டில் நிறுத்தி அதில் நின்றபடி நடன கலைஞர்கள் நடனம் ஆடினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் அறை குறை ஆடை அணிந்து ஆபாசமாக நடனமாடியுள்ளனர்.

இது பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் நடன நிகழ்ச்சி நடந்த பக்தேசலு கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு ஆபாச நடனமாடியதாக 17 நடன கலைஞர்களை கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் பெண்கள். மேலும் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிர்வாகியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான அனைவரும் குண்டூர், செங்கூர், நெல்லூ ரைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களிடம் இருந்து ரூ.19 ஆயிரம் பணம், 14 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

ரிக்கார்டு டான்சுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாகவும், தடையை மீறி நடனமாடியதால் கலைஞர்கள் கைது செய்யப்பட்டதாகவும் நெல்லூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரமணகுமார் தெரிவித்துள்ளார்.

English summary
Obscene dances were taken place at Nellore district during Sri Rama Navami celebrations and Officials neglects the illegal activities in temple premises
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X