For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பர்தா அணிந்து வந்த ஆண்: பெண்ணிடம் நகை பறித்த போது முகத்திரை கிழிந்ததால் சிக்கினான்

Google Oneindia Tamil News

கமுதி: கமுதி அருகே பர்தா அணிந்து, பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கடலாடி அருகே இளஞ்செம்பூர் காவல் நிலைய சரகம் பொதி குளத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி ஜெயலட்சுமி(28). இவர் அதிகாலையில் வீட்டுப் பின்புறமாகச் சென்றபோது, முஸ்லீம் பெண் போல பர்தா ஆடை அணிந்து ஒருவர் , முகத்தை மறைத்வாறு நின்று கொண்டிருந்தாராம்.

அவர் திடீரென்று ஜெயலட்சுமி மீது பாய்ந்து அவரது கழுத்தில் கிடந்த நாலரை பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு ஓடி விட்டார்.நகை பறிப்பு சம்பவத்தில், பர்தா ஆடை அணிந்து வந்தவருடன் ஜெயலட்சுமி போராடி, முகத்தில் தொங்கிய பர்தா ஆடையைக் கிழித்தபோது, நகை அபகரிக்க வந்தவர் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பழனிச்சாமி(எ)கண்ணன் (28) எனபது தெரியவந்ததாம்.

சம்பவம் குறித்து இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில ஜெயலட்சுமி புகார் செய்தார். காவல் ஆய்வாளர்(பொறுப்பு) குமரன், சார்பு ஆய்வாளர் அருள் பிரகாஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து, கண்ணனை தேடி வந்தார்கள்.

பின்னர், முதுகுளத்தூர்-கடலாடி சாலையில், இளஞ்செம்பூர் விலக்கு சாலை அருகே கோவில் ஒன்றின் பின்புறம் பதுங்கி இருந்த கண்ணனை போலீஸார் கைது செய்தார்கள்.கண்ணன் தந்த தகவலின் பேரில் அவரது வீட்டில் ஒளித்து வைத்திருந்த ஜெயலட்சுமியின் நகையை போலீஸார் கைப்பற்றினார்கள். முதுகுளத்தூர் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட கண்ணனை 15 நாள் காவலில் வைக்கும்படி குற்றவியல் நடுவர் சி.மோகன்ராம் உத்தரவிட்டுள்ளார்.

English summary
In Kadaladi four and half savaran of chain was snatched from a 28 years old lady by a man named Subramani who was wearing purkka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X