For Daily Alerts
Just In
கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 20ல் திறப்பு
கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் ஜூன் 20ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 133 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 438 சுயநிதி கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் ஏப்ரல் இரண்டாம் வாரம் தேர்வுகள் துவங்கின. மே இரண்டாம் வாரத்தோடு தேர்வுகள் முடியவுள்ள நிலையில், தற்போது மாணவர்களுக்கான கோடை கால விடுமுறை துவங்க உள்ளது.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறுகையில், ""அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகள், கோடை விடுமுறை, மே, இரண்டாம் வாரத்தில் துவங்க உள்ளது. கோடை விடுமுறை முடிந்து, அனைத்து கல்லூரிகளும், ஜூன், 20ம் தேதி திறக்கப்பட உள்ளன,'' என்று கூறினார்.
Comments
English summary
Higer Education department announced the Arts and Science colleges will re open on June 20.
Story first published: Friday, May 3, 2013, 9:14 [IST]