For Daily Alerts
Just In
பின்லேடனின் 2ம் ஆண்டு நினைவு நாள் பேரணி..தீவிரவாதிகள் பங்கேற்பு
ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே 1-ந்தேதி பாகிஸ்தானின் அபோதாபாத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை அமெரிக்காவின் நேவி சீல் என்ற அதிரடிப்படையினர் சுட்டுக் கொலை செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பின்லேடனின் முதலாமாண்டு நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.
நேற்று முன் தினம் 2-வது நினைவு தினம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடைபிடிக்கப்பட்டது. பாகிஸ்தான் நாட்டின் வட மேற்கு நகரமான குவெட்டாவில் பேரணி நடத்தப்பட்டது. இதில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதரவு அமைப்பான ஜமியாத் உலமா இ-இஸ்லாம் என்ற அமைப்பினர் கலந்து கொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள் அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
Comments
English summary
Al-Qaida supporters gather in Pakistan, chanting, carrying photos of 9/11 mastermind bin Laden on 2nd anniversary of his death.