ஒரு பக்கம் சட்டத் திருத்தம்.. இன்னொரு பக்கம் ஒதுக்கீடு....
10. அக்டோபர் 31ம் தேதி இந்த மசோதா நிலக்கரித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படுகிறது.
11. 2009ம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி இந்த மசோதாவுக்கு நிலைக் குழு அனுமதி அளிக்கிறது.
12. ஆனால், இது எல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் 142 நிலக்கரி சுரங்கங்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இதில் 57 நிறுவனங்கள் தனியாருடையவை.
13. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் எம்எம்டிஆர் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுகிறது.
14. 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி தான் இந்தச் சட்டம் திருத்தப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுகிறது. இதன்மூலம் இனிமேல் நிலக்கரி சுரங்கங்கள் ஏலம் மூலம் மட்டுமே தனியாருக்கு ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. ஆனால், இதை ஒரு உத்தரவு மூலம் முன்பே செய்திருந்தால் 142 நிலக்கரி சுரங்கங்களும் ஏலம் மூலமே விற்கப்பட்டு மத்திய அரசுக்கு நல்ல வருவாய் கிடைத்திருக்கும். ஆனால், உத்தரவைப் பிறப்பிக்காமல், சட்டத் திருத்தம் என்ற வழியைக் கடைபிடித்து காலதாமதம் செய்து கொண்டே, அதே நேரத்தில் இந்த கால அவகாசத்தில் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஒரு கமிட்டியை வைத்துக் கொண்டு மத்திய அரசு விற்றுள்ளது. இதனால் அரசுக்கு நஷ்டம் ரூ. 1.86 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்கிறது சிஏஜி.