For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி சனாவுல்லா மரணம்

Google Oneindia Tamil News

சண்டிகர்: ஜம்மு சிறையில் சக கைதியால் கடுமையாக தாக்கப்பட்ட பாகிஸ்தான் ஆயுள் தண்டனைக் கைதி சனாவுல்லா ரஞ்சய் கோமாநிலையிலிருந்து மீளாமலேயே இன்று காலை மரணமடைந்தார்.

54 வயதான சனாவுல்லா கடந்த 1999ம்ஆண்டுதீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் ஆவார்.

ஜம்முவில் உள்ள பிரபலமான கோட் பல்வால் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். பாகிஸ்தான் சிறையில் இந்தியக் கைதி சரப்ஜித் சிங் கைதிகளால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சனாவுல்லாவை சக கைதி ஒருவர் கூரிய ஆயுதத்தால் கடுமையாக தாக்கினார்.

Sanaullah
இதில் படுகாயமடைந்தார் சனாவுல்லா. அவரை ஜம்மு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சண்டிகருக்குக் கொண்டு வந்து அங்கு சேர்த்தனர். அங்கு கோமா நிலையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். மே 7ம் தேதி சனாவுல்லாவின் குடும்பத்தினர் அவரை வந்து பார்த்தனர்.

இந்த நிலையில் இன்று சனாவுல்லா மரணமடைந்தார்.

English summary
Pakistani prisoner Sanaullah Ranjay, who was attacked at a jail in Jammu earlier this month, has died at hospital in Chandigarh where he was being treated. Sanaullah, 54, was assaulted with bricks at Jammu's Kot Bhalwal jail on May 3. He was airlifted to Chandigarh in critical condition and was in coma since the attack on him. His family visited him in the hospital on May 7. He was convicted for terrorist activities in 1999 and awarded life term
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X