For Daily Alerts
Just In
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: நீரா ராடியா 28-ல் ஆஜராக சிபிஐ கோர்ட்சம்மன்!
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் நீரா ராடியா தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆதாயம் அடையும் வகையில் செயல்பட்டவர் அரசியல் தரகர் நீரா ராடியா. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நேற்று டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி. ஷைனி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சாட்சிகளின் பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் நீரா ராடியாவின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இதைத் தொடர்ந்து வரும் 28-ந் தேதி நீதிமன்றத்தில் நீரா ராடியா ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி ஷைனி உத்தரவிட்டார்.
Comments
English summary
Former corporate lobbyist Niira Radia, a key prosecution witness in the 2G spectrum allocation scam, is likely to appear before a Delhi court on May 28 to depose in the case.
Story first published: Friday, May 10, 2013, 9:25 [IST]